Police Department News

கடலூர் முதுநகரில் பரபரப்பு : இளம் பெண் கடத்தல்:வாலிபருக்கு வலைவீச்சு

கடலூர் முதுநகரில் பரபரப்பு : இளம் பெண் கடத்தல்:வாலிபருக்கு வலைவீச்சு

கடலூரில் இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் முதுநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் பிளஸ் -2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) வீட்டில் இருந்த இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.