Police Department News

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டி அழிப்பு.

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டி அழிப்பு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்திமீன்களை விவசாய நிலத்தில் பண்னை குட்டைகள் அமைத்து சட்டவிரோதமாக வளர்த்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் புகார்கள் சென்றன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரப்படி வட்டாட்சியர் ராஜா அவர்களின் தலைமையிலான குழுவினர்.
ஆய்வு மேற்கொண்டதில் ரெட்டியூர் கிராமத்தில் முனுசாமி (39) என்பவரின் விவசாய நிலத்தில் 3 மீன்பண்ணை குட்டைகளில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்தது தெரிய வந்தது.
இந்த குட்டைகளில் ஒரு குட்டையில் மீன் குஞ்சுகளும், மற்றொரு குட்டையில் சிறிய மீன்களும் 3வது குட்டையில் விற்பனைக்கு தயாரான நிலையிலும் மீன்கள் இருந்ததை கண்டுபிடித்து மீன் குட்டைகளில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் குழிதோண்டி புதைத்து , பிளிச்சிங் பவுடர் கொட்டி மீன்களை அழித்தனர்.
இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் ரவி. வி.ஏ.ஒ.குமரன்,
மீன்வள சார்ஆய்வாளர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் சிங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.