Police Department News

2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி அவர்கள்.

2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி அவர்கள்.

கடந்த 09.05.2023 அன்று மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சோதனையில் ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஆந்திராவிலிருந்து போலியான பதிவு எண் கொண்ட சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், மேலவர் புதுக்குளம் என்ற கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த தகவலையடுத்து விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்தனர்.

அதில் சாக்கு மூட்டையில் ரூ. 2 கோடி மதிப்புடைய 2090 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

கஞ்சாவையும் பறிமுதல் செய்து கடத்தல் கும்பலையயும் கூண்டோடு கைது செய்தனர்.

இந்த கடத்தல் கும்பலை கண்டுபிடித்த காவலர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பணவெகுமதியும், நற்சான்றிதழும் வழங்கி அவர்களுக்கு ரூ.1 இலட்சம் பரிசு வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.