Police Recruitment

சென்னை ராமாபுரத்தில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்

சென்னை ராமாபுரத்தில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்

சென்னை ராமாபுரம், பகுதியை சேர்ந்த இளம் பெண், கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவர் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியே வாலிபர் ஒருவர் மறைந்து இருந்து செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் ‘இதை பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்தது தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ராமாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் இளம்பெண் குளிப்பதை படம் பிடித்தது அவரது வீட்டின் மேல் தளத்தில் வசித்து வரும் வாலிபர் மவுரியன் என்பது தெரிந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜன் மற்றும் போலீசார் பெண் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்த தலைமறைவான மவுரியனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.