Police Recruitment

நல்லிணக்க தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

நல்லிணக்க தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

நல்லிணக்க தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நல்லிணக்க நாளான 18.08.2023 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கீழ்கண்ட உறுதி மொழி எடுக்கப்பட்டது

“நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன், மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதிமொழி அளிக்கிறேன்.” என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.