Police Recruitment

மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை யுடன் இணைந்து மதுரை மாநகர காவல்துறையினரின் மாபெரும் இரத்ததான முகாம்

மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை யுடன் இணைந்து மதுரை மாநகர காவல்துறையினரின் மாபெரும் இரத்ததான முகாம்

.
மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமை இன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர ஆயுதப் படையில் அமைந்துள்ள அரசு காவலர் மருத்துவமனையில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. ஜெ. லோகநாதன் IPS., அவர்கள் துவக்கிவைத்து ரத்த தானம் வழங்கினார். இந்த இரத்த தான முகாமில் காவல் துணை ஆணையர் (தெற்கு) திரு.A.பிரதீப் IPS., அவர்கள் காவல் துணை ஆணையர் (வடக்கு) திருமதி. புக்யா சினேக பிரியா IPS., அவர்கள் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.குமார் IPS., அவர்கள் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), திரு. மங்களேஸ்வரன் அவர்கள் ,மாநகர காவல் உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 210 நபர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.