Police Recruitment

காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம்.

காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காளப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிவேல் (வயது.45)
அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தார்.
கரும்பு பயிர் வளர்ந்து அறுவடைக்கு தையராக இருந்த நிலையில் நேற்று மதியம் திடிரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

இருப்பினும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமாயின.
தீ விபத்திற்க்கு காரணம் மின்கசிவா அல்லது பட்டாசு விழுந்து தீபற்றியதா என தீயணைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.