
குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி
தேன்கனிக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது.
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாகிய இரண்டு குழந்தைகளின் தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஷ் 43 இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் கடைக்கு வரும்போது எல்லாம் ஆசை வார்த்தைகளை கூறி பழகியுள்ளார் மேலும் சிறுமியுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார் இதனால் அவரது பெற்றோர் இருதுக்கோட்டை துணை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் அப்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த ருத்ரேஷ் போலீசில் மாட்டிக் கொள்வோம் என பயந்து சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 6ம் தேதி இரவு
கர்நாடக மாநிலம் ஜிகினியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார் சிறுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது அதன் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலிசார் ருத்ரேசை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
