Police Recruitment

தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல்

தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல்

மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ் வயது (19) சில தினங்களுக்கு முன் கணபதி நகர் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கீர்த்தி ராஜ் மீது மோத வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி நகரில் உள்ள தனது நண்பர்கள் ஆன விஷ்வா வித்தியாசாகர், ஆகியோருடன் கீர்த்தி ராஜ் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நரேஷ் அவரது நண்பர் பிரவீன் மற்றும் ஒருவர் கீர்த்தி ராஜை கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளார். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போது கீர்த்தி ராஜ் மீது தனது இருசக்கர வாகனத்தை நண்பர்களுடன் சேர்ந்து நரேஷ் ஏற்றினார். இதில் கீர்த்திராஜிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கீர்த்தி ராஜ் கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிந்து நரேஷ் உட்பட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.