Police Department News

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு


திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கன்சாவடி அகற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை சுங்கன்சாவடியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை எடுத்து சுங்கன்சாவடி எதிர்ப்பு குழுவினர் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழில்பேட்டையில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்கள் கருப்புக் கொடியை காட்டி சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் வியாபாரிகள் சங்கம் மற்றும் மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கம் ஆகியோர் உட்பட கப்பலூர் தொழில் பேட்டையில் உள்ள 450 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய-மாநில அரசுகள் சுங்கஞ்சாவடியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
தங்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் வாக்காளர்கள் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.