Police Department News

சாலையை கடக்க முயன்ற போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை மீட்ட உதவி ஆய்வாளர்

சாலையை கடக்க முயன்ற போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை மீட்ட உதவி ஆய்வாளர்


மதுரை மாவட்டம்
24.04.2024 அன்று ஆஸ்டின்பட்டி சார்பு ஆய்வாளர் திரு சங்கர் அவர்கள் பணி நிமித்தமாக சென்று திரும்புகையில் திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற மாற்று திறனாளி திடீரென சாலையின் குறுக்கே மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட சார்பு ஆய்வாளர் அவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் அமர வைத்து முதல் உதவி மற்றும் நீர் கொடுத்தார், மேலும் திரு சங்கர் அவர்கள் மயங்கி விழுந்த நபரிடம் உணவு எதுவும் வாங்கி கொடுக்கட்டுமா என்று கேட்ட நிலையில், தான் விற்பனை செய்யும் பேனாவை வாங்குமாறு கூறினார். உடனே உதவி ஆய்வாளர் தன்னிடம் இருந்த பணத்திற்கு பேனா வாங்கிக்கொண்டார்.
சாலையில் சென்ற பல பேர்,
விழுந்த மாற்றுத்திறனாளியை வேடிக்கை பார்த்த நிலையில் சற்றும் தயங்காமல் அவரை மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு சங்கர் அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.