Police Department News

மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

08/07/2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக 28 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி அதை கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் மேலராங்கியத்தை சேர்ந்த கணேசன் மகன் சரித்திர பதிவேடு குற்றவாளியான முருகன் என்ற லோடு முருகன் வயது 42, மதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஜோதி பாசு மகன் சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவிக்குமார் என்ற தவளை ரவி வயது 32, மதுரை அண்ணா நகரை சேர்ந்த பாண்டியன் மகன் சத்தியேந்திரன் வயது 32 ஆகியோரை கைது செய்து கடத்தி வந்த கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் பணம் பத்தாயிரம் ஆகியவற்றையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இவ் வழக்கில் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று 28ஆம் தேதி சாட்சிகள் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. செங்கமலச்செல்வன் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை கடத்தி வந்த எதிரிகளான முருகன் என்ற லோடு முருகன் வயது 42, ரவிக்குமார் என்ற தவளை ரவி வயது 32 மற்றும் சத்தியேந்திரன் வயது 32 ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனதால் அவர்களை குற்றவாளி என தீர்மானித்து எதிரிகளுக்கு தலா 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்கள்

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த கீரைத்துறை காவல் துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.