Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை

15.09.2017 ஆண்டு
திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை வழக்கின் எதிரி பால் கண்ணன் என்பவர் வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கு சிவகிரி காவல் நிலையத்தில் குற்ற எண் 245/17,ன்படி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கு சங்கரன் கோயில் சார்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது இந்த நிலையில் நீதிபதி திரு மகேந்திரவர்மா அவர்களால் எதிரி பால் கண்ணன் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது அரசு தரப்பு வழக்கறிஞர் திரு கண்ணன் அவர்கள். ஆய்வாளர் மற்றும் சிவகிரி காவல் நிலைய கோர்ட் காவலர்
Gr l 1474 பால் துறை பாண்டி அவர்கள் இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்த காவலர்களுக்கு தென்காசி காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.