Police Department News

பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, செவன்த் டே மேல்நிலைப் பள்ளி மற்றும் தல்லாகுளம் பகுதியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 221-வது மற்றும் 222-வது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.