Police Department News

தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா மறுசீராய்வு மனு தாக்கல்…

தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா மறுசீராய்வு மனு தாக்கல்…
நிர்பயா குற்றவாளிகள் அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் சிறையில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டு விட்டது. தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கயிறு, முகமூடிகளும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் தனித்தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை-மாலை இரு நேரமும் டாக்டர்கள் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறதுஇந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை குற்றவாளி வினய் சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.