Police Department News

முதியவரிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது…!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சேகரை தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்திருந்த 8 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து 13.04.2020 அன்று சேகர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இது சம்பந்தமாக சார்பு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தேவகோட்டை சேர்ந்த பிரவீன், லட்சுமணன் ஆகிய 2 நபர்களை u/s. 294(b),323, 506(I),379 IPC -ன் கீழ் 19.02.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்
அவர்களிடமிருந்து திருடிய நகையை மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.