Police Department News

தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை…

விருதுநகர் மாவட்டம்:-

தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை….

மனதை உருக்கும் விசயமாக திடீர் உடல்நலகுறைவாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலைமை காவலர் ஜெயபிரகாஷ்.

அனைவரிடமும் சிரித்தமுகத்துடன் பழகக்கூடியவர் அனைவராலும் JP ஏட்டையா என்று அழைக்கப்பட்டவர்.

இவர் பணிபுரிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் குற்றபிரிவு,சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திறமையாக பணியாற்றியவர்.

சென்றவருடம் சுதந்திரதினத்தன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் பதக்கம் பெற்றவர்.

ஆனால் சில தினங்களுக்குமுன்பு உடல்நிலை குறைவுகாரணமாக அரசுமருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துக்ககரமான நிகழ்சியில் அருப்புக்கோட்டை காவல் துணைகண்காணிப்பாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் இருந்தார்.

அருப்புக்கோட்டை நகர் காவல் துறை மற்றும் அனைத்து காவல் ஆளிநர்கள் உட்பட பலரும் அன்னாரது உடலை பார்பதற்காக நின்றிருந்தனர்.

மறைந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தவர் JP அவர்கள்.

அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டு அரசுமரியாதையுடன்
குண்டுகள் முழக்கமிட இறுதியடக்கம் நடைபெற்றது.

அவருடன் பணியாற்றிய சககாவலர் அதிகாரிகள் இறுதிவணக்கம் செலுத்தினர்.

மறைந்த தலைமை காவலருக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரை சரக காவல் துறை துணை தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களும், விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பெருமாள் அவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அருப்புக்கோட்டை காவல் துறை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் அமரர் திரு.ஜெயபிரகாஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Police E News
செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.