திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது வடக்கு செழியநல்லூர் அருகே உள்ள மேல இலந்தை குளம் ஓடையில் மணல் திருட்டில் ஈடுபட்ட வடக்கு செழியநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் வயது 36, துர்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூல்பாண்டி வயது 32, ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து, கைது செய்து நீதி மன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி