Police Department News

எங்கேயும் பணி எப்போதும் பணி என நிற்காமல் ஓடும் காவல் துறையினர்.

விருதுநகர் மாவட்டம்:-

எங்கேயும் பணி எப்போதும் பணி என நிற்காமல் ஓடும் காவல் துறையினர்.

இவர்களின் ஓய்வில்லாத பணியால்தான் நாம் அனைவரும் இரவில் கண்அயர்கின்றோம்(தூக்கம்)

இவர்கள் எப்போதும் ஒன்றை பற்றியே சிந்தனையில் இருக்கும் அது இன்று எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் சட்டம் ஒழுங்கு இருக்கவேண்டும், அலுவலகம் அமைதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் மாறாகத்தான் நடக்கும் நடந்தும் வருகிறது தவறல்ல இது இயற்கையின் நியதி.

நாட்டிலும் நகரத்திலும் எந்த ஒரு ஊர்வலமாக இருக்கட்டும் காவலர்கள்தான் முன்நிறுத்தப்படுவார்கள்.

அதற்கான வழிகாட்டுதல் நடைமுறையினை பின்பற்றி செயலாற்றுவர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல்சேகரன் குருபூஜை 11-9-2020 நடைபெறுகிறது.

அந்த பூஜையில் பங்கேற்க முக்கியபிரமுகர் மற்றும் அவர்களது சொந்தவாகனத்திற்கு மட்டுமே அனுமதி என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு பணிகளின் பாதுகாப்பிற்காக வந்துள்ள காவல்துறையினர் அருப்புக்கோட்டை
ஆவியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.

அவ்வாறு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு ஆவியூர் காவல் நிலையத்தின் சார்பாக சார்பு ஆய்வாளர் அவர்களினால் மதியஉணவின் போது அசைவ உணவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.