Police Department News

விழுப்புரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் நிலையப் பகுதியில், மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், வௌ;வேறு இடங்களில் நான்கு பெண்களிடம் தாலி செயினை பறித்துச் சென்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன், மரக்காணம் காவல் ஆய்வாளர் வளர்மதி, தனிப்படை உதவி- ஆய்வாளர் திரு.செல்வம், ஏட்டு திரு.முனுசாமி, திரு.முகமதுஷபி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், வழிபறியில் ஈடுபட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த மெய்தீன் மகன் ஷாதிக்பாஷா, 23, கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த ஜோசப்ராஜ் மகன் பிரேம்ஜோசப், 25, என தெரிய வந்தது. நகைகளை பறிகொடுத்த ஓமந்தூர் அய்யப்பன் மனைவி முத்துகுமாரி,19 கணபதிசெட்டிகுளம் திவாகர் மனைவி சந்தியா,27 சின்னமுதலியார்சாவடி சேகர் மனைவி சுந்தரி, 50 அனிச்சகுப்பம் கோங்கோ மனைவி ஜாக்குலின்மேரி, 47, ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, ஷாதிக்பாஷா, பிரேம்ஜோசப் ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.