Police Department News

சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

22.11.2020
சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கொடுத்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிப்பதற்காக சிவகங்கை மாவட்ட SP திரு.ரோஹித்நாதன் ராஐகோபால்.IPS., அவர்களது உத்தரவின் பேரில் திரு.இராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு பிரிவு அவர்கள் முன்னிலையில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிப்பதற்கான குழு ஆலோசனை கூட்டம் 22.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சிவகங்கை மாயா மஹாலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்களை வரவழைத்து CCTNS Portal மற்றும் NCRB இணையதளங்களின் மூலம் காணாமல் போன நபர்களின் புகைப்படங்கள்¸ அங்க அடையாளங்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்த நபர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை Projector மூலம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் விவரங்கள் சேகரித்து காணாமல் போனவர்களின் தொடர்பான வழக்குகளை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.