Police Recruitment

மதுரை, கீழவெளி வீதியிலுள்ள சிறுமலர் இல்லத்தில் நகை, பணம் திருட்டு, தெற்குவாசல் போலீசார் விசாரணை

மதுரை, கீழவெளி வீதியிலுள்ள சிறுமலர் இல்லத்தில் நகை, பணம் திருட்டு, தெற்குவாசல் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், தெற்கு வாசல் B 5, குற்றப் பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கீழ வெளி வீதி, IC கான்வெண்ட் சிறுமலர் இல்லத்தில் அதாவது RC நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஜேக்கப் மகள் சிஸ்டர் பாத்திமா மேரி வயது 52/2020, தங்கியிருந்து தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

கடந்த இரண்டு வாரங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சர்ச்சுக்கு போகாத காரணத்தால் , நேற்று 08/12/2020 ம் தேதி காலை 5.50 க்கு தான் தங்கியிருந்த அறையை பூட்டி விட்டு சாவியை எப்போதும் வைக்கும் அருகில் உள்ள திண்டில் வைத்து விட்டு சர்ச்சுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் பின் வந்து பார்த்தபோது அறை கதவு திறந்திருந்த நிலையில் பீரோவில் இருந்த பணம் ரூபாய் 50,000/−மற்றும் தங்க நகைகள் சுமார் 14 பவுன், சார்ஜில் போட்டிருந்த நோக்கியோ செல்போன் ஆகியவை காணவில்லை, உடனே சிஸ்டர் பாத்திமா மேரி அவர்கள் தெற்கு வாசல் B5, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் களவு போனவற்றை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சக்குபாய் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.