Police Department News

மதுரை, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூரை சேர்ந்த இருவர் கைது. கரிமேடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூரை சேர்ந்த இருவர் கைது. கரிமேடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாநகர், கரிமேடு C5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.ரீகன் அவர்கள், நிலையத்தில் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி கடந்த 27 ம் தேதி நிலையத்தில் நேரில் ஆஜராகி, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பற்றி தகவல் கூற, சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் அவர்கள் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் தகவல் கூறி அனுமதி பெற்று அவர்களின் உத்தரவின்படி, சக காவலர்களுடன், தகுந்த உபகரணங்களுடன், நிலையத்திலிருந்து காலை 9.45 மணியளவில் புறப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், அங்கு தகவலாளி நபர்களை அடையாளம் காட்டி மறைந்தவுடன் மேற்படி நபர்களை நோக்கி செல்லும் போது அவர்கள் காவலர்களை பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர் உடனே காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் அவர்கள் செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்த அழகர் மகன் பிரசாத் வயது 29/21, மற்றும் செல்லூர் நிர்மலா காம்பெளண்டை சேர்ந்த ஜீவானந்தம் மகன் ஜோதிபாசு வயது 38/21, எனவும் தெரிய வந்தது, அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடம் மதியை மயக்கும் கஞ்சா என்னும் சட்டவிரோதமான போதை பொருள் இருந்தது உடனே அவைகளையும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கரவாகனத்தையும் கைபற்றி அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் அவர்களை கைது செய்து நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து, சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் அவர்கள் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.