Police Department News

மதுரை, பந்தடி பகுதியில் கடன் தொல்லையால் 2 வயது குழந்தையை கொன்று, தம்பதியினரும் தூக்குப் போட்டு தற்கொலை, மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் அவர்கள் விசாரணை

மதுரை, பந்தடி பகுதியில் கடன் தொல்லையால் 2 வயது குழந்தையை கொன்று, தம்பதியினரும் தூக்குப் போட்டு தற்கொலை, மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் அவர்கள் விசாரணை

மதுரை, வில்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர், அப்பாவு மகன் முத்துக்கிருஷ்ணன் வயது 67/21, இவர் மர சிற்ப வேலைகள் செய்து வருபவர், இவரது மனைவி விஜயலெக்ஷிமி குடும்பத்தலைவியாக இருந்து வீட்டு வேலைகளை கவணித்து வருகிறார், இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் மகாவிக்னேஷ்வரி, இரண்டாவது மகள் சண்முகப்பிரியா, மூன்றாவது மகள் வாணிஶ்ரீ, ஆக மூன்று மகள்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள், நான்காவது மகள் சாய் சுகாஷினி மட்டும் திருமணமாகாமல் B.A. முடித்து விட்டு தன் தாய்தந்தையருடன் வசித்து வருகிறார். தனது மூன்றாவது மகள் வாணிஶ்ரீக்கு மஹால் 7 வது தெருவில் வசித்து வரும் ரத்தினசாமி ஆசாரி மகன் விஜயகுமார் என்பவருக்கு 2018 ம் ஆண்டு திருமணம் முடித்து, சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள், இவரகளுக்கு ஹாசினி என்று இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தவிட்டுச்சந்தை பந்தடி 5 வது தெருவிற்கு குடிவந்தனர், இந்த நிலையில் நேற்று 28 ம் தேதி பகல் 11 மணியளவில் மருகனின் தம்பி சந்திரமோகன் அவர்களிடமிருந்து போன் வந்தது, காலை 9.30 மணி வரை வீட்டு கதவு திறக்காததால் சந்தேகப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கியதாகவும், குழந்தை தரையில் இறந்து கிடந்ததாகவும் கூறியுள்ளார் தகவல் அறிந்ததும் நேரில் சென்று இறந்து கிடந்தவர்களை பார்த்து அதன் பின் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மதுரை டவுன் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்களின் தலைமையில் தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர் அதன்பின் உதவி ஆணையரின் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. சோமு அவர்கள் வழக்கு பதிவு செய்து, உதவி ஆணையர் சூரக்குமார் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொரோனா ஊரடங்கால் விஜயகுமாரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து விஜயகுமார் லட்ச கணக்கில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர் இதனால் விஜயகுமார் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளார்கள் இதனால் குழந்தை பரிதாபமாக இறந்தது, இதனை தொடரந்து அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால், RDO விசாரணைக்கும் அனுப்பப்போவதாக காவல் துறையினர் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.