Police Department News

மதுரை, அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மதுரை, அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மனைவி மகமாயி வயது 70, இவர் நேற்று காலை தனது வீட்டின் முன் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்து ஒன்னரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

செயின் பறிப்பு சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அலங்காநல்லூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.