தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பாடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் 6 பள்ளிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ¸ மாணவியர்கள் மற்றும் குடும்பத்தினர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வருகை தந்து கில்லி நொண்டி, கோலிக்காய், பம்பரம், கயிறு தாவுதல், பாண்டி தாயம், பல்லாங்குழி, […]
Author: policeenews
கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார்
கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார் இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான இரயில் பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரயிலில் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும்¸ இரயில்வே விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடத்தில் […]
kavalan sos app எப்படி உபயோகிக்க வேண்டும்;
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர். இதில் மிருகங்களின் விலைகளை பட்டியல் இட்டு விவரிக்கின்றார்கள். மிருகங்களின் விலையை காட்டிலும் மனிதர்களின் விலை மிக கேவலமானதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். உள்ளாட்சி தேர்தல் குறுகிய காலத்தில் இருப்பதால் இதனால் அங்கு உள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கல் லூரி மாணவர் கடலில் மூழ்கி மாய மானார். 4 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் சூர்யா (18). இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜய் (18), ரமேஷ் மகன் விஜய் (19), சுப்பிரமணி மகன் கோவர்த்தன் (19), ஆனந்த் (18) உள்பட 14 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கலை அறிவி யல் கல்லூரியில் படித்து வருகின் றனர். முத்தியால்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியி […]
ரயில் நிலைய நடைமேடையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்: உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார்
தானே பிரசவம் பார்த்து பெற்ற குழந்தையுடன் ரம்யா, கணவர் வெங்கடேஷ். உடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார். எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தனக்குத் தானே அவர் பிரசவம் பார்த்துக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த பாப்பநாடுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக சென்னைக்கு வந்த இவர், நிறைமாத கர்ப்பிணியான மனைவி ரம்யாவையும் (25) […]
அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்
சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: பொன் மாணிக்கவேல் அறிவிப்பு சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான . சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார். சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கொடுக்க மறுப்பதாக, பொன் மாணிக்கவேல் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, […]
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நகைக்கடை பூட்டை உடைத்து 140 பவுன் கொள்ளை: ஹெல்மெட் அணிந்து புகுந்த மர்ம நபர் கைவரிசை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த் தாண்டத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து 140 பவுன் நகைகளை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார். காவல் நிலையம் அருகே நடந்த இந்த துணிகர சம்பவத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்(45). இவர், ‘சிலங்கா ஜுவல்ஸ்’ என்னும் பெயரில் நாகர் கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். கடையின் பின் புறம் அவரது வீடு உள்ளது. நகைகள் கொள்ளை […]
காவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்
மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு பயிற்சியினர் மற்றும் மதுரை சமூகவியல் துறையினருடன் இணைந்து நேற்று (14.12.2019) மதுரை மாநகர் கிரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த அலுவலக கட்டிடத்தை வேலூர் சரக துணைத் தலைவர்(DIG) திருமதி காமினி ஐபிஎஸ்,வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தனர் போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்










