பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் 3 பெண் காவலர்களைத் தாக்கிய கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரது மகள் சத்யா(19). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப்(21) என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பர்கூர் காவல் நிலையத்தில், சத்யா மற்றும் பிரதாப் ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். […]
Police Department News
காவல்துறையின் பெருமையை உணர்த்தும் காவலர் அருங்காட்சியகம்
கோவை ஸ்டேட் பேங்க்சாலையில் ரயில் நிலையம் எதிரே, சிவப்பு, வெள்ளை வர்ண கட்டிடத்தில், காவல்துறைக்கே உரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது ‘காவலர் அருங்காட்சியகம்’. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை, புனரமைப்பு செய்து, காவல்துறையின் பெருமையை விளக்கும் வகையில், மாநகர காவல் துறை நிர்வாகத்தால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1918-ம் ஆண்டு எப்.ஏ.ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் 3,488 சதுரடி பரப்பில் மேற்கண்ட இடத்தில் ஹாமில்டன் கிளப் கட்டிடம் கட்டப்பட்டது. நூறாண்டை கடந்த இக்கட்டிடத்தில் மொத்தம் 16 […]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம்,அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம்,அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.11.2019 அன்று மாலையில், பொதுமக்கள் அதிகளவில் கூடும், முக்கிய சாலை சந்திப்புகள், வணிக கடைவீதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், தலைக்கவசம் அணிதலின் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் ஏற்படும் பாதுகாப்பான வாழ்க்கை, அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் நேரிடும் விபத்துக்கள், அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் ஏற்படும் […]
“PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பரையாற்றினார்.
நேற்று 19 11 2019 Prevention of child abuse day முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு சார்பாக மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார். திருமதி.H.ஜெயலட்சுமி, காவல் துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்கள், பள்ளியின் […]
சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெருவில் வசித்துவரும் மாலா வ/38, க/பெ.முருகன் என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொத்து சம்மந்தமாக மாலாவின் கணவருடன் பிறந்த 4 அக்கா, 2 அண்ணன் ஆகியோருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த 17.11.2019 அன்று மதியம் 3.30 மணியளவில் மேற்படி மாலா தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலை செய்யும் […]
ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு
ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4-வது பிளாக், என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் திரு.D.முரளி வ/56, த/பெ. துரைசாமி என்பவர் கடந்த 16.11.2019 அன்று 11.30 மணியளவில் F-2 எழும்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள பழைய […]
மதுரையில் ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது
மதுரையில் ரூ.7.62 லட்சம் மதிப் புள்ள கள்ளநோட்டு பண்டலை வீசிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் வெளியூரில் இருந்து வந்த லாரியில் இருந்து குடிநீர் பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்தனர். ரயில் நிலையம் அருகே லாரி நின்றிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பண்டல் ஒன்றை லாரிக்குள் வீசி விட்டு தப்பினார். இதைக் கவனித்த லாரி ஓட்டுநர் பூபதி, அந்த பார்சலை […]
டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு 2 ‘ஸ்கோச்’ விருதுகள்
டிஜிபி பிரதீப் வி. பிலிப் 2 ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். காவல் துறை நண்பர்கள் இயக்கம், உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளன. மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. சென்னை […]
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார். வந்த இடத்தில் பணம் ருபாய் 7,000 மற்றும் செல்போன் – ஐயும் Miss பன்னிவிட்டார். வழிதெரியாமல் உத்துமலை வந்து இறங்கியுள்ளார்கள். ஊத்துமலை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் (ஜெய்சங்கர்) மற்றும் காவலர்கள் மேற்படி நபரை குடும்பத்தோடு நிலையம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனது சொந்த பணத்தை பிரித்து […]
ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு
கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவல் ஆளிநர்கள் இன்று 18 .11 .19ஆம் தேதிகாலை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரங்களில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவிக்கின்றோம்










