முயல் வேட்டை ஐவர் கைது:- அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தையில் பெரிய அளவில் நீர் தேக்கம் (அணைகட்டு) உள்ளது அதனை சுற்றி புல்வெளிகள் முட்புதற்கள் அதிகம் என்பதால் காட்டுமுயல் அதிகமாகவே இருக்கும் இதனை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடும்படியாக சந்தேகத்தின் பெயரில் இரவில் முயல் வேட்டையில் இருந்தவர்களை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர் அவர்களிடமிருந்து முயல் மற்றும் முயல் வேட்டைக்கு பயன்படும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுபோல காட்டுக்குள் இருக்கும் காடை,கெளதாரி, சிறுநரி,ஆகியவை வேட்டையாடுவதற்கு தடைசெய்யப்பட்டதாகும் மீறும் […]
Police Department News
பொது மக்களின் நலனில் அருப்புக்கோட்டை காவல் துறை:-
எங்கு பார்த்தாலும் வாகனம், பொது ஜன நெருக்கடி,இதனால் அல்லல் பட்டது அருப்புக்கோட்டை அடிக்கடி வாகன விபத்துக்கள் அருப்புக்கோட்டை To மதுரை ரோடு பாலம் ஏற்றம் இறக்கம் வரும்போது ஜெட் வேகத்தில் செல்கிறது இதனால் விபத்து நடக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் நடவடிக்கையால் மதுரை ரோட்டில் வாகனத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது இதனால் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாகச்சென்று வருவது மனநிம்மதி அளிக்கிறது என்று பாதசாரிகளின் தெரிவிக்கின்றனர் காவல் துறையின் இந்த […]
மதுரவாயலில் துணிகரம்; விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: பெண் உட்பட 3 பேர் கைது 2 பேர் ஓட்டம்
கைது செய்யப்பட்ட ராஜா, அஷோக் விக்டர், கைப்பற்றப்பட்ட வாகனம் சென்னையை அடுத்த போரூர் அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு, பாரதியார் தெருவில் வசிப்பவர் சுந்தரசெல்வி(52), இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுந்தரசெல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலயில் இவருக்கு தீனதயாளன்(46) என்பவர் பழக்கமாகியுள்ளார். தன்னை வழக்கறிஞர் என்று கூறி பழகியுள்ளார். இதில் அடிக்கடி சுந்தரசெல்வி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுந்தரசெல்வியின் வீட்டிற்கு வழக்கம்போல் […]
சாலையோரம் கிடக்கும் முதியவருக்கு லுங்கியை வாங்கி போர்த்துகிறார், 2.அவரை தூக்கி ஓரம் அமரவைக்கிறார், 3.உணவு எதாவது வேண்டுமா என்று கேட்கிறார், 4.செய்த உதவிக்கு பெரியவர் கையெடுத்து கும்பிடுகிறார்
சென்னையில் சாலையோரம் துணி இல்லாமல் கிடந்த முதியவருக்கு புது லுங்கி வாங்கி அணிவித்து அவரை தூக்கி ஓரம் உட்கார வைத்து குறைகளை கேட்கும் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரை காரில் சென்றவர் வீடியோ எடுத்து பாராட்டி போட்டுள்ளது வைரலாகி வருகிறது. காவல்துறையில் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் துறை போக்குவரத்து காவல்துறை மட்டுமே. காரணம் மோட்டார் வாகனம் செலுத்தும் சாதாரண மக்களிடம் நல்லதோ கெட்டதோ தினமும் மல்லுக்கட்டுவது இவர்களே. சென்னை முதல் தமிழகம் முழுதும் போக்குவரத்து காவலர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் […]
சென்னை ட்ரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை
தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், சென்னையில் உள்ள டிரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து குரங்கணிக்கு ட்ரக்கிங் குழுவை வழி நடத்திச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம், தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து டிரக்கிங் செல்வோரை அழைத்து சென்றதாக பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப்பிலும் தேனி போலீசார் ஆய்வு நடத்தினர். நீலாங்கரை காவல் நிலையத்தில் டிரக்கிங் […]
சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் கைது
சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ராகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ஸ்விப்ட் டிசையர் காரை பெற்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ராகேஷ் திடீரென காருடன் மாயமானதால், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் அளித்தார். ராகேஷின் செல்போன் […]
திருவள்ளூர் அருகே வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கல்
திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம் அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை […]
ஓட்டல் அறையில் பதுக்கப்பட்டிருந்த 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரியில், ஓட்டல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1300 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை சப்ளை செய்த செஞ்சியைச் சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவான நிலையில் சையத் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த ஓட்டலில் இருந்து இந்த மதுபாட்டில்களை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசா இருக்கனும்னு பெரியவர்கள் கூறுவார்கள் அதற்காக இன்று 11/3/2018 ஞாயிறு காலை 10.00 மணி முதல் காவலர் தேர்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதன் காரணமாக காலை 6.00 மணி முதல் […]
மாணவி கொலை சம்பவம்: துணை ஆணையரிடம் மல்லுக்கட்டிய போலி நிருபர் கைது
கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த தி.நகர் துணை ஆணையரிடம் நான் யார் தெரியுமா? என்று பந்தா காட்டிய போலி நிருபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். அனைவரையும் பதற்றப்பட வைத்த இந்த சம்பவத்தில் போலீஸார் மிகுந்த பதற்றத்துடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் […]










