
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (17.08.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் முதற்கட்டமாக 7 காவல் நிலையங்களில் பணிபுரியும் 21 காவலர்களுக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள்.
