
கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், கொள்ளை வழக்கில் எதிரிகளான ராதாபுரம் வட்டம், பணகுடி, வடக்கு தெருவைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் சவரிவளன் வயது 20 மற்றும் ராதாபுரம் வட்டம், துலுக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகன் எல்கான்தாசன் வயது 28 ஆகிய இருவரும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜார்ஜ் சகாய சாந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,21.08.2021 இன்று எதிரிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
