
மதுரை கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது 25 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) ரத்தினம் (70/22) S/O கருப்புத் தேவர், தேனி மாவட்டம் (தலைமறைவு ) 2) வசந்தா(50/22) W/O ரத்தினம் தேனி மாவட்டம் 3) ராணி (42/22) W/O மேற்படி 2 நபர்களை கைதுசெய்து செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 25 Kg மற்றும் ரூபாய் 5500/- பறிமுதல் செய்தனர்
மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
