
சென்னை தண்டையார் பேட்டையில் வட மாநில கட்டிடத்தொழிலாளி வெட்டி கொலை
சென்னை தண்டையார்பேட்டை புதிய வைத்தியநாதன் தெருவில் வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர் இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த சுர்பாத் சர்தார் வயது 17/22, என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார் சுர்பாத்சர்தார் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக தண்டையார்பேட்டை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு
சென்ற போலிசார் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுர்பாத்சர்தாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த
னர்.
மேலும் இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து சுர்பாத்சர்தார் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? கட்டிட தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா?என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்
