


இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அடையாறு உட்கோட்டம் சார்பாக தென் சென்னை வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்தாய்வு முகாம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய திரு.R.சக்திவேல் (போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் தெற்கு) மற்றும் திரு.R.ஹிட்லர் ( போக்குவரத்து உதவி ஆணையர் அடையாறு) அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்சென்னை மாவட்ட வியாபாரிகள் அடையாறு, சைதாப்பேட்டை, வேளச்சேரி,தரமணி, துரைப்பாக்கம் சார்ந்த தலைவர், செயலாளர், அமைப்பாளர் ஆகியோரின் ஒட்டுமொத்த கருத்துகளை போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டறிந்தனர் மற்றும் அவர்கள் குறைகளை சட்ட ஆலோசனை பெற்று செயல்படுத்த ஒப்புக்கொண்டனர்.
திரு.R.சக்திவேல்( போ.து.ஆணையாளர்) அவர்கள் வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு உயிர் எவ்வளவு ஒரு குடும்பத்திற்கு முக்கியம் என்பதை சரியான கருத்துகளை பல்வேறு உதாரணங்களுடன் முன்வைத்து பேசியதாவது.
முகப்பு விழிப்புணர்வு வாசகங்கள்
சாலை பாதுகாப்பு வாசகங்கள்
நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!
பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!!
விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!!
சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!
கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!
வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!
தலைக்கவசம் அணிவோம்! சீட் பெல்ட் அணிவோம்!!
படியில் பயணம்! நொடியில் மரணம்!!
இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!
போதையில் பயணம்! பாதையில் மரணம்!!
வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!!
வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!!
தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!!
சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!!
முறையான இயக்கம்! முத்தான பயணம்!!
பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!!
விதி மீறாமல் ஓட்டுவோம்!
விதி மீறுபவர்களையும் வீழ்த்தாமல் ஓட்டுவோம்!!
பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!!
சாலையில் கவனமாக ஓட்டுவோம்! சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டுவோம்!!
பொறுமையுடன் ஓட்டுவோம்! பொறுமை இல்லாதவர்களையும் காப்போம்!!
அனுசரித்து ஓட்டுவோம்! அனைவரையும் காப்போம்!!
சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம்! சண்டைக்காரர்களையும் திருத்துவோம்!!
எதிர்பார்த்து ஓட்டுவோம்! எந்த சூழலிலும் காப்போம்!!
மனமே கவனம்! மனது அறியாததை கண்களும் பார்ப்பதில்லை! காதுகளும் கேட்பதில்லை!! மூளையும் உணருவதில்லை!!!
மன நலமும், உடல் நலமும் உயிருள்ளவரை அழியாத சொத்து!
மது, போதை, புகைப் பழக்கத்தை விட்டொழிப்போம்! மனதையும் உடலையும் காப்போம்!!
சாலைவிதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!!
சாலை பாதுகாப்பு! சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!!
சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!!
வாகன அறிவும், சாலை அறிவும்! வாழ்நாள் பாதுகாப்பு!!
புத்தாக்கப்பயிற்சி பெறுவோம்! புதுப்பித்தல் கல்வி பெறுவோம்!!
பொது வாகனத்தை பயன்படுத்துவோம்! தனி வாகனத்தை தவிர்ப்போம்!!
காவலர்கள் நமக்கு தோழர்கள்! மதிப்போம் மனித நேயம் காப்போம்!!
முதலுதவியை முக்கியமாக கற்போம்!!
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு, விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியம்!!
ஓய்வின்றி ஓட்டாதீர்! உயிருடன் வாழ்வீர்!!
ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்! ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்!!
இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்! வாழ்நாளை நீட்டிப்பீர்!!
தலைக்கவசம் தன்னுயிர் காக்கும்! தன்னுயிர் தன்னுறவு காக்கும்!!
போதையில் வாகனம் ஓட்டுவது! பயணிகளுக்குத் தகனம் காட்டுவது!!
போதையில்லா வாகன ஓட்டுதல்! விபத்தில்லாப் பாதையைக் காட்டுதல்!!
சாலை விதிகளை மதிப்போம்! சந்தோசமான பயணத்தைக் கொடுப்போம்!!
சாலை விதிகளை மதிப்போம்! வரும் சங்கடங்களைத் தடுப்போம்!!
சாலை விதிகள் சாவைக் குறைக்கும் சக்திகள்!!
விபத்தைத் தடுக்கலாம் விதிகளை மதித்தால்!!
இப்படி நல்ல அறிவுரைகளை கூறி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பாக கலந்தாய்வு முகாம் மகிழ்ச்சியுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த
1.J7 வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.Jean Bensan M.D
- J1 சைதாப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன்.M
3.J2& J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அசோக்குமார்M.G
4.J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் உதவிஆய்வாளர் திரு.மகேந்திரன் மற்றும் திரு.கருப்பையா ( J5 போ.உ.ஆய்வாளர்) மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
