Police Department News

இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம்- தருமபுரி கலெக்டர் தகவல்

இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம்- தருமபுரி கலெக்டர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் மையங்களை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தற்போது இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகிலேயே பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இந்த மையங்களில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும்.

தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தை பற்றி கூடுதல் தகவல்கள் பெறவும், இணைய வழியில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கடைசி நாளாகும். அன்று இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.