Police Recruitment

பாலக்கோடு காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் அவர்கள் பொறுப்பேற்பு .

பாலக்கோடு காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் அவர்கள் பொறுப்பேற்பு .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவ சுரேஷ் அவர்கள்
கடந்த வாரம் ஓகேனக்கல் காவல் நிலைய ஆய்வாளராக
மாற்றப்பட்டார்,

அவருக்கு பதிலாக பாலக்கோடு இன்ஸ்பெக்டராக ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலசுந்தரம் அவர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து பாலக்கோடு காவல் ஆய்வாளராக பாலசுந்தரம் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
அது சமயம் பாலக்கோடு காவல் நிலைய போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பணி சிறக்க அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.