
கோவையில் லைக், அண்ட் சேர் என ரூபாய் 15.49 லட்சம் மோசடி
குறும்படங்களை லைக், ஷேர் செய்தால் பணம் தருவதாக முதியவரிடம் 15.49 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் வயது 64, சொந்தமாக தொழில் செய்து வருகிறார் சில நாட்களுக்கு முன் இவரது மொபைல் போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்தது அதில் ஆன்லைனில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு கருத்துக்களை பதிவிட்டு லைக், ஷேர் செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பி தாமோதரன் மர்ம நபரின் மெசேஜில் தெரிவித்திருந்த வங்கி கணக்கிற்கு சிறிய அளவு முதலீடு செய்தார் அதற்கு உடனடியாக கூடுதல் லாபம் கிடைத்தது அதைத் தொடர்ந்து தாமோதரன் பல்வேறு தவணைகளாக 15 . 49 லட்ச ரூபாயை முதலீடு செய்தார் அதன் பின் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை முதலீடு செய்த தொகையும் திரும்ப பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த தாமோதரன் போலீஸில் புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
