![](https://policeenews.com/wp-content/uploads/2024/06/1000137606.jpg)
கள்ளச்சாரயா வியாபாரிகள் மீது கொலை வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் வயது 55, வீராசாமி வயது 40, வீரமுத்து வயது 33,.
இவர்கள் ஜூன் 18 ல் அதே பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர்.
அவர்களில் கண்ணன் ஜூன் 19ஆம் தேதியும், வீரச்சாமி ஜூன் 20ம் தேதியும் அவரவர் வீடுகளில் இறந்தனர். வீரமுத்து சேலம் அரசு மருத்துவமனையில் இறந்தார். கண்ணன் மகன் மணிகண்டனின் புகாரின்படி கச்சிராயபாளையம் போலீசார், உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நச்சுப்பொருள் என தெரிந்தும் விற்பனை செய்தல், கொலை வழக்கு, விஷ நெடியுடன் கூடிய சாராயத்தை பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மாதவச்சேரி ராமர் வயது 36 சேஷ சமுத்திரன், சின்னத்துரை வயது 36, வரியூர் ஜோசப் ராஜா வயது 35 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
![](http://policeenews.com/wp-content/uploads/2024/05/Screenshot_20210920-193209_Photo-Par-Tamil-Likhe--612x1024.jpg)