Police Department News

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 04/09/24 மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பாதுகாப்பான பயணம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உரிய அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் மற்றும் மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி. ஷோபனா, சார்பு ஆய்வாளர் திலகர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.