
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (21.02.2025) மதுரை மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 162 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
