
மதுரை காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன் பயன்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம்
சிலர் அதிக சப்தம் எழுப்ப கூடிய ஹாரன்களை வாகனங்களில் பொருத்தி பிற வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அறிந்த போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்
நேற்று 10/03/25 மாலை மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன், மியூசிக் ஹாரன், Noise pollution. எழுப்ப ஹாரன் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கும்பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ஹாரன்கள் நீக்கப்பட்டது இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, நந்தகுமார், பூரணகிருஷ்ணன் மற்றும் தெற்கு போக்குவரத்து துறை ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்
