Police Department News

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்தில்கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்தில்
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய சரகத்திற்குட்ட தாட்கோ நகரில் வாகன தணிக்கையின் போது காரில் கஞ்சா கொண்டு வந்த திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் இருப்பதால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .கமல் கிஷோர் அவர்களின் உத்தரவின் பேரில் செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் மேற்படி தினேஷ் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.