Police Department News

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது மதுரை புறவழிச்சாலை பகுதியில் கடந்த 14,10,2017 அன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதை அடுத்து மதுரை மாவட்டம் திருவாத ஊரைச் சேர்ந்த பெ. அய்யம்பிள்ளை வயது 58 என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை நிறைவில் அய்யம்பிள்ளைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் அவர்கள் உத்தரவிட்டார் இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே விஜய பாண்டியன் முன்னிலையாகி வாதிட்டார். கஞ்சா கடத்திய வழக்கில் ஏற்கனவே
பெ.அய்யம் பிள்ளை மீது காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடுத்த வழக்கில் அவர் 12 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.