Police Department News

மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம்

மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம்

மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

07.03.2024 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா பற்றி கிடைத்த ரகசிய தகவலின் படி காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை செய்து வந்த போது கீரைத்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் கிழக்கு தெரு முனியாண்டி கோயில் அருகில் உள்ள கருவேலங்காட்டு பகுதியில் 25 கிலோ கஞ்சாவை தரையில் புதைத்து வைத்து இருந்த பாண்டியராஜன் வயது 23/25. S/o.அந்தோணி HS NO.22/2021, ஜாக்கி (எ) பிரசாந்த் 22/25 ,HS NO.26/2021,
S/o.அந்தோணி மற்றும் சரண்யா 20/25
W/O.பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்து புதைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருளான சுமார் 25 கிலோ கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து
நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டது. இவ் வழக்கின் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று 24.04.2025 சாட்சிகள் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஹரிஹர குமார் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 25 கிலோ கஞ்சாவை கடத்தி வைத்திருந்த எதிரிகள் பாண்டியராஜன், ஜாக்கி (எ) பிரசாந்த் மற்றும் சரண்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆவதால் எதிரிகளை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து எதிரிகளுக்கு 12 வருடங்கள் கடும் காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்கள்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கீரைத்துறை காவல் துறையினரை
காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.