
ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
02.07.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடகிருஷ்ணன் (IUCAW), மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
