
கூடங்குளம்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அடங்கார்குளத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் சுகந்தன் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி இரவில் கூடங்குளம் அருகே மேலசிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள தன்னுடைய நண்பரான முருகனின் (32) வீட்டுக்கு சென்றார். அங்கு சுகந்தனும், முருகனும் மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கைதான முருகன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமா…
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டு கட்டையால் சுகந்தனை தாக்கி, அவரது தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதில் சுகந்தன் துடித்துடித்து இறந்தார். இந்த கொலை குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த கூடங்குளத்தைச் சேர்ந்த தங்கபெருமாள் மகன் சிங் (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
