மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி போஸ்டர்.
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திருமதி. மதன கலா, இவர் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் பொது மக்கள், வியாபாரிகள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொரோனா காலத்தில் கருணையோடு எளிய மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் உணவு பொருள் கொடுத்த காவல் ஆய்வாளர் மதன கலாவை தயவு செய்து இடமாற்றம் செய்யாதீர் எனக் கூறி திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
