கஞ்சாவுடன் வாலிபர் கைது மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்.ஐ தனலட்சுமி தலைமையில் போலீசார் கூடல் நகர் குட்செட் ரோடு கண்மாய் வழியாக ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபர் சிக்கினார்.அவரிடம் இருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது சோதனையில் தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் வேல் மகன் ஹரிஹரன் வயது (20) என்பது தெரிந்தது. பின்னர் […]
Month: July 2025
மதுரை சிம்மக்கல் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்
மதுரை சிம்மக்கல் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜே. லோகநாதன் IPS அவர்களது ஆணைக்கிணங்க.. போக்குவரத்து காவல் துணை ஆணையர்.. எஸ் வனிதா அவர்களது உத்தரவுப்படி, நேற்று 29/07/25 மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அவரவர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி பேருந்து நிறுத்தங்கள்.. மற்றும் முக்கிய போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து […]
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு தற்பொழுது சிறப்பு டிஜிபியாக நிர்வாகப் பணியில் இருக்கும் ஜி.வெங்கட்ராமன் அவர்களை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக்க முடிவு என தகவல். வெளியாகியுள்ளது ஜி. வெங்கடராமன் , தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 1994 தொகுதி இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி ஆவார் சைபர் கிரைம் பிரிவுக்கான கூடுதல் காவல் இயக்குநர் (ஏடிஜிபி), ஏடிஜிபி தலைமையகம் மற்றும் ஏடிஜிபி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை அவர் வகித்துள்ளார். ஏடிஜிபி பதவியில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் […]
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (26.07.2025) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் […]
வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்
வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் இன்று (26.07.2025) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவல்துறை அரசு வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரையில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்
மதுரையில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் கடந்த 9. 5 .2023 அன்று மதுரை மாநகர் எஸ் எஸ் காலனி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாடக்குளம் தானத்துவம் புதூர் பகுதியில் குடியிருக்கும் ஈடான் என்பவரின் மகன் அய்யனன் வயது 53, என்பவர் தனது வீட்டில் முன்பு அமர்ந்திருந்த தனது மகன் ஜெயக்குமார் வயது 20 என்பவரை ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் பகை காரணமாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் […]
விளையாட்டு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற தலைமை காவலர்க்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
விளையாட்டு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற தலைமை காவலர்க்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற தலைமை காவலரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்.. மதுரை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் த.கா.926,சந்துரு என்பவர் அமெரிக்காவின் அலபாமா நகரில் நடைபெற்ற World Police and Fire Games அமைப்பால் நடத்தப்பட்ட 21 St Bionnial Games போட்டிகளில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உயரம் தாண்டுதல் […]
மதுரையில் அதி நவீன வாகன பதிவு கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச் சாவடி திறப்பு
மதுரையில் அதி நவீன வாகன பதிவு கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச் சாவடி திறப்பு மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (24.07.2025) எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில், அகச்சிவப்பு கதிர்கள் மூலம், வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து வாகன விபரங்களை எளிய முறையில் அடையாளம் காணும் வகையிலான , அதிநவீன வாகன […]
மதுரை தமிழ் சங்க ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலை கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை தமிழ் சங்க ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலை கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் 23.07.25 அன்று காலை. மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட தமிழ் சங்கம் ரோட்டில் அமைந்துள்ள.. செந்தமிழ் கலைக்கல்லூரியில் போக்குவரத்து மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் வழங்கினார்கள்… இதில் இளைஞர்கள் எவ்வாறு சாலை விதிகளை பின்பற்றி வர வேண்டும் என்பது பற்றியும் […]
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் 22.07.25 அன்று காலை. ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் வழங்கினார் இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என்பதனை பற்றியும் எவ்வாறு பயணிக்க […]