Police Department News

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையம் காவலர்களின் அதிதுரித நடவடிக்கையால் காணாமல் போன குழந்தை மீட்பு

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையம் காவலர்களின் அதிதுரித நடவடிக்கையால் காணாமல் போன குழந்தை மீட்பு

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான,No 1 டோல்கேட் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள Y” road பஸ் ஸ்டாப்பில் பெயர் விலாசம் தெரியாத சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஆதரவற்று இருந்துள்ளதை கண்டு கொள்ளிடம் காவல் நிலையம் போலீசார் அழைத்து சென்று அதற்கு பாதுகாப்பு வழங்கி அந்த குழந்தையைப் பற்றிய தகவலை காவல்துறை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தனர், மேலும் குழந்தையின் பெற்றோரை தேடுவதில் முழு முயற்ச்சில் ஈடுபட்டனர்.
குழந்தையைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள காவல்நிலைய போன் நம்பரும், சார்பு ஆய்வாளர் நம்பரும் பதிவிட்டிருந்தனர்.

Kollidam ps-9498100647
Kollidam SI-9498112857

தகவல் அறிந்த குழந்தையின் தந்தை மோகன் கொள்ளிடம் காவல்நிலையம் நோக்கி விரைந்து வந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.
காவலர்களின் இந்த துரித நடவடிக்கையை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.