Police Department News

மதுரை, தெற்கு மாரட்வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலர்

மதுரை, தெற்கு மாரட்வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலர்

மதுரை, திடீர் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர் திரு. ஜெயகண்ணு மகன், கனேசன் வயது 45/21., இவர் மதுரை கீரைத்துரை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை கனேசன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மதுரை தீடீர் நகர் C1 காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது போலீஸ்காரர் கனேசன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து திடீர் நகர் போலீசார் பிணத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திடீர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. S.முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த காவலருக்கு கடந்த 2000 ம் ஆண்டு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் 2010 ம் ஆண்டு இவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார் குழந்தைகள் இரண்டும் இவரது மாமியார் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

போலீசார் விசாரணையில் கூறியதாவது, இவர் 2002 ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார். இவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பணிக்கு செல்லவில்லை,, வீடும் பூட்டியை கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர். எனவே இவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.