மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது, மதிச்சியம் போலீசாரின் அதிரடி
மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய காவலர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வைகை வடகரை ஆசாரி தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது, அதன் பேரில் காவலர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மொபட்டில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடிக்க முயற்சி செய்தனர். அதில் இருவர் தப்பி செல்ல ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினான். விசாரணையில் அவன் மதிச்சியம் ஆழ்வார்புரத்தை சேர்ந்த ரவுடி சதீஸ்குமார் வயது 22/21 என தெரிய வந்தது. அவன் மொபட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார்த்திக், அழகுபாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர். இதே போன்று செல்லூர் பகுதியிலும் செல்லூர் போலீசார் கஞ்சா கடத்தியவர்களை கைது செய்துள்ளனர்.